Wednesday 26 September 2012

சுந்தரபாண்டியன்



படம் வெளியான அன்று என் அண்ணன் மகன் படம் பார்த்துவிட்டு வந்து நல்லா இருக்கு சச்சா என்றான் .அப்புறம் கேபிள் சங்கர் விமர்சனம் ,ஆனந்தவிகடன் விமர்சனம் எல்லாம் படிச்சுட்டேன் .எல்லாரும் விமர்சனம் எழுதியபிறகு நான் என்ன எழுதுவது .படம் பார்த்தபின்பு எழுதலாம் என தோன்றியது .

படம் யாரும் சொல்லாத கதை என்று கிடையாது .எல்லோரும் தொட்டுசென்ற களம்தான்.காட்சி அமைப்பில் புதுமை என்றும் சொல்லமுடியாது .ஆனால் படம் ரசிக்கவைக்கிறது .

சசிகுமாருக்கு ரசிகர்களின் நாடி தெரிந்து இருக்கிறது .தனக்கு எது செட்டாகும் என தேர்ந்தெடுத்து நடித்து இருக்கிறார் .நகைசுவை நடிகருக்கு இடம் கொடுத்து தான் நடிக்கவேண்டிய இடத்தில் மட்டும் நடித்து இருக்கிறார் .பேருந்து காட்சிகளில் பரோட்டா சூரியோடு சேர்ந்து அதகளபடுத்துகிறார்.ஓரிரு காதல் காட்சிகளே இருந்தாலும் அதிலும் சோடைபோகவில்லை சசிகுமார் .

சசிகுமாருக்கு பின்பு படத்தின் தூணாக தாங்கி இருப்பது சூரி என சொல்லலாம் .சூரி முந்தய படங்களில்  கொஞ்சம் கவுண்டமணி சாயலில் கத்திபேசுவார்.இந்த படத்தில் அமைதியாக பேசி நம்மை குலுங்கி சிரிக்கவைத்து விடுகிறார் .ஏறக்குறைய படத்தின் படத்தின் பெரும்பகுதியில் வந்தாலும் அசத்தல் நடிப்பு சூரிக்கு .

கதாநாயகிக்கு இந்த படம் அறிமுகம் என்பதை நம்பமுடியவில்லை .சந்தோசமோ துக்கமோ எந்த காட்சியிலும் அவரது முகம் பொருந்திபோகிறது .
காதலித்தவனை கல்யாணம் செய்ய அப்பா சம்மதம் சொல்லியவுடன் வரும் அழுகையும் சந்தோசமும் மிக அர்ப்புதமாய் நடித்து உள்ளார் .

இரண்டு பாடல் காட்சிகள் வாயசைப்பு இல்லாமல் பின்புலத்தில் ஓடவிட்டு காட்சிகள் எடுத்தவிதம் அவ்வளவு அழகு .

நண்பர்களாக வரும் அத்தனைபேரும் காட்சியின் தன்மை உணர்ந்து நடித்து உள்ளனர் .அப்பாக்களாக வரும் நரேன் ,தென்னவன் இருவரும் நடிப்பும் மிகை இல்லை .

இசை ரகுநந்தன் .மோசமில்லை .பின்னணி இசை படத்தின் பலம் .

ஒளிப்பதிவும் ரசிக்கவைக்கிறது .

படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி எதிர்பாராதவிதமாக அமைக்கப்பட்டுள்ளது .

பழையமொந்தையில் புதியகள் என்பதுபோல எண்பதுகளில் வந்த படம் போல இருந்தாலும் இருக்கையில் அமரவைத்துவிடுகிறது படம் .

திரைஅரங்கில் குடும்பத்தோடு சென்று பார்க்கலாம் .துளி ஆபாசம் கிடையாது

Friday 7 September 2012

வேளாங்கன்னியில் நான்

நேட்று அண்ணன் மகளை பார்ப்பதற்க்கு வேளாங்கன்னி வந்து இருந்தேன்.அங்கே எடுத்த படங்கள்




























Tuesday 4 September 2012

ஒரு கிராமத்தானின் பதிவுலக மாநாட்டு அனுபவங்கள்

ஒருநாள் நண்பர் கஸாலி போன் செய்து சென்னை பதிவர் சந்திப்புக்கு வந்துவிடு என சொன்னார் .நானும் சரி என சொல்லிவிட்டேன் .இரண்டுநாள் கழித்து நானும் என் மனைவியும் அவங்க அக்கா வீட்டுக்கு சென்றுவிட்டு மோட்டர் சைக்கிளில் திரும்பிக்கொண்டு இருந்தோம் .அப்பொழுது பேச்சோடு பேச்சாக நான் சனிக்கிழமை சென்னைக்கு போகிறேன் என்று சொன்னேன் .எதற்கு என கேட்டாள்.ப்ளாக்கர் மீட்டிங் என சொன்னேன் .நானும் வருகிறேன் என சொன்னாள்.நான் கூட்டிட்டு போக முடியாது .உன்னை கொண்டுபோய் ஹோட்டலில் விட்டுவிட்டு மறுபடியும் கூட்டிட்டு வருவதற்கு எதற்கு சென்னைக்கு வரவேண்டும் என மறுத்துவிட்டேன் .ஒரு வழியாக சம்மதம் வாங்கி வெள்ளிக்கிழமை இரவு அறந்தாங்கியில் இருந்து இரவு எட்டு மணிக்கு பயணமானேன் .பஸ் இடையிலேயே கெட்டுபோக போகுது என தெரியாமலே .

பயணம் சென்றுகொண்டு இருக்கும்போது திருச்சிதாண்டியவுடன் பஸ் கெட்டுபோய் விட்டது .அதன்பின்பு இரண்டுமணி நேரம் கழித்து வேறு ஒரு பஸ் வந்து எங்களை ஏற்றிக்கொண்டு சென்னை பயணம் ஆனது .காலை ஐந்து மணிக்கு சென்னையில் இருக்கவேண்டிய பஸ் எட்டு மணிக்கு கோயம்பேட்டில் என்னை இறக்கிவிட்டு சென்றுவிட்டது .

ராஜேந்திரகுமார் நாவலில் வரும் ஞே எனும்  சொல்லுக்கு ஏற்றார் போல என் விழி பிதுங்கி எழும்பூருக்கு எப்படி போவது என தெரியாமல் நின்றேன்.ஒரு வழியாக எழும்பூர் வந்து ஹோட்டல் ரீகலில் தங்கினேன் .கொஞ்சநேரம் ஓய்வெடுத்துவிட்டு உணவருந்த சரவணபவன் உணவகம் சென்றேன் .ரெண்டு இட்லி ஒரு வடை ஒரு தோசை சாப்பிட்டேன் .ப்ரெஷர் உள்ள ஆளாக இருந்தால் நிச்சயம் எனக்கு மயக்கமே வந்து இருக்கும் கொண்டுவந்து கொடுத்த பில்லை பார்த்து .பெரிய இட்லியாக பத்து ரூபாய்க்கு ஐந்து இட்லி கிடைக்கும் ஊரில் பிறந்த எனக்கு நூற்றி பதினாறு ரூபாய் என்பது மிக மிக அதிகம் .டிப்ஸ் பத்து ரூபாய் வேறு

ஹோட்டலுக்கு நண்பர் அருள் எழில் வந்து சந்தித்தார் .அவருடன் ஒருமணி நேரத்திற்கு மேல் பேசிக்கொண்டு இருந்தேன் .அதன்பின்பு நண்பர் கஸாலி இருக்கும் இடம் நோக்கி சென்றேன்  ,கஸாலியிடம் நீண்டநேரம் உரையாடிக்கொண்டு இருந்தேன் .மதிய உணவருந்தும் நேரமும் வந்து விட்டது .கஸாலி நான் சாப்டுற சாப்பாடு உனக்கு சரிவராது .பக்கத்தில் கேரள உணவகம் ஒன்று இருக்கு .அங்கே போய் சாப்பிடு என சொன்னார் .நானும் அந்த கேரள உணவகம் குமரகோம் தேடிசென்று விறு விறு என உள்ளே சென்று
அமர்வதற்கு இடம் தேடினேன் .அப்பொழுது ஒருவர் சார் என பின்னாடி நின்று ர
அழைத்தார் .என்ன என கேட்டபோது வெளியில் அமருங்கள் .உங்கள் முறை வரும்போது அழைப்போம் என சொன்னார் .அப்போ;அப்பொழுதுதான்
கவனித்தேன் ஏற்கனவே பத்து பேருக்கு மேல் தங்கள் முறைக்கு அமர்ந்து இருப்பதை .இவ்வாறு சனிக்கிழமை ஓடி விட்டது .

ஞாயிறு காலையில் பதிவர் சந்திப்பு நடக்கும் இடத்திற்கு செல்வதற்கு கஸாலிக்கு போன் செய்து வழி கேட்டேன் .அப்படியே ஆட்டோ காரரிடம் போய் அஞ்சுவிளக்கு செல்லவேண்டும் என சொன்னபோது கொல்லு கொலைக்கு அஞ்சாமல் நூற்றி ஐம்பது கேட்டார் .என்னங்க விலை கூடுதலாக கேக்குறீங்க என சொன்னபோது நான் திரும்பி வரும்போது வெறும் ஆளாக வரவேண்டும் என சொன்னார் .வேறுவழி அதே ஆட்டோவில் மண்டபம் வந்து சேர்ந்தேன் .

மண்டபத்தில் இறங்கி கஸாலிக்கு போன் செய்து  எங்கே இருக்கே என்றேன் .மேலே ஏறிவா என சொன்னார் .மேலே ஏறி சென்றவுடனே நிறைய பேர் என்னிடம் வந்து தங்களை அறிமுகபடுத்திகொண்டு என்னையும் நலம் விசாரித்தனர் ,சிலர் மிக நெருக்கமாக நெடுநாள் பழகியவர்கள் போல பேசினார்கள் .அப்பொழுதுதான் தெரிந்தது கஸாலி ஏற்கனவே என் கொள்கை பரப்பு செயலாளராக செயல்பட்டு இருக்கிறார் என்பது .மிக்க நன்றி கஸாலி .

அப்புறம் திடிர்னு என் கையில் மைக்கை கொடுத்து உங்களை அறிமுகபடுத்திகொள்ளுங்கள் என சொன்னார்கள் .தபூசங்கர் கவிதை தலைப்பு வெட்கத்தை கேட்டாள் என்ன தருவாய் என்பது போல வெட்கம் பிதுங்கி திங்க முதலில் பேச மறுத்தேன் ,பின்பு ஒரு வழியாக பேசி முடித்தேன் ,பின்பு நிறைய நண்பர்களிடம் பேசினேன் ,அதன்பின்பு மச்சான் சிராஜுதீன் வந்தார் .கஸாலி அவருக்கு தெரிந்த நண்பர்கள் அனைவரிடமும் அறிமுக படுத்தினார் .

பின்பு பதிவர்கள் அறிமுகம் நடந்தது .ஏறக்குறைய எல்லோருமே தயார் நிலையில் வந்து இருப்பார்கள் போல .மைக் சில நேரம் தன்வேலையை சரிவர
செய்யாத போதும் பதிவர்கள் தங்களை மிக அழகாக அறிமுகபடுத்திக்கொண்டார்கள் .அப்பொழுதுதான் எனக்கு தெரிந்தது மறுபடி மேடையில் என்னை அறிமுகபடுத்திகொள்ள வேண்டும் என்பது .ஏனோ இந்த நேரத்தில் மன்னன் ரஜினி கவுண்டமணி தியேட்டர் காமடி நினைவுக்கு வந்தது .மேடையில் நான் ஏறி நின்றபோது என் காலடியில் ஏனோ பூமி நழுவி ஓடிக்கொண்டு இருந்தது .மேடையில் கேபிள் சங்கர் என்ன சொன்னார் நான் என்ன பேசினேன் என்பது தெரியவில்லை .ஒருவழியாக பதிவர்கள் அறிமுகம் முடிந்து உணவருந்தும் வேலை தொடங்கியது .அதன் பின்பு எல்லோரிடமும் பேசிக்கொண்டு இருந்தேன் .

மண்டபத்திற்கு வெளியே நின்று பேசிக்கொண்டு இருந்தோம் .திடிரென பட்டுக்கோட்டை பிரபாகர் நடந்து வந்துகொண்டு இருந்தார் .மனம் திடிரென துள்ளிக்குதித்தது .இளம் வயதில் அவர் எழுதிய நாவல்களை விரும்பி படித்தவன் நான் .தொட்டால் தொடரும் நாவல் ஆனந்தவிகடனில் வெளிவந்தபோது அறந்தாங்கி சென்று புக் வாங்கி வந்து படிப்பேன் .அந்த அளவு
பிகேபி பைத்தியம் நான் .விழா மேடையில் பிகேபி அமர்ந்து இருந்தபோது அவர் அருகில் சென்று என்னை அறிமுகபடுத்திகொண்டேன் உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் கிராமம் நான் என .

மறுபடியும் மூத்த பதிவர்களை சிறப்பிக்கும் விழா பிகேபி தலைமையில் நடந்தது .ஒவ்வொருவராக அறிமுகபடுத்தி சிறப்பித்துகொண்டு வரும்போது திடிரென என் பெயரை சொல்லி அழைத்தார்கள் மூத்தபதிவர் ஒருவருக்கு சால்வை போர்த்துவதற்கு .மேடை ஏறியபொழுது விழாவை வழி நடத்திக்கொண்டு இருந்த சுரேகா என் தலைமுடி ரகசியம் கேட்டார் .அதையும் சொல்லிவிட்டு சால்வை போர்த்திவிட்டு இறங்கி என் பணியை முடித்தேன் .

இன்னும் நிறைய எழுதலாம் .இங்கே எல்லோரும் எழுதி விட்டார்கள் .அதனால் இதை என் அனுபவமாக மட்டுமே எழுதினேன் .யாரையும் குறிப்பிட்டு எழுத முடியவில்லை .விழாவுக்கு வந்த அனைத்து பதிவர்களுக்கும் என்னிடம் உரையாடிய நண்பர்கள் ,விழா சிறக்க உழைத்த பதிவர்கள் எல்லோருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்




Monday 3 September 2012

முகமூடி .சூப்பர்மேன் எனும் சொத்தைமேன்



நான் படம் பார்க்க திரை அரங்கம் சென்றால் ஒன்று நடிகர்களுக்காக அல்லது இயக்குனர்களுக்காக .அப்படி நான் இயக்குநருக்காக சென்றுபார்த்த படம் முகமூடி .மிஷ்கினின் சித்திரம் பேசுதடி ,அஞ்சாதே ,யுத்தம் செய் மற்றும் நந்தலாலா காப்பி செய்து எடுக்கப்பட்ட படம் என்றாலும்கூட எனக்கு பிடிக்கவே செய்து இருந்தது .

ஏற்கனவே ஓரளவு ரசிக்ககூடிய அளவில் படம் எடுத்தார் என்ற காரணத்திற்க்காக  
முகமூடி படம் பார்க்க சென்றேன் .டைட்டில் போடும்போது நடிகர்கள் பெயர் போடும்போதுகூட ஆஹா படம் அருமையாக இருக்கபோகுது என்று நினைத்துக்கொண்டு இருந்த என் எண்ணத்தில் மண்ணை அள்ளிபோட்டதுதான் மிச்சம் .

படம் ஆரம்பித்தவுடனே சூப்பர் ஹீரோ படங்களில் கதாநாயகன் சாகசம் செய்து அறிமுகம் ஆவதுபோல இல்லாமல் மிக சாதரணமாக ஜீவா அறிமுகம் ஆகும்போது ஆகா மிஷ்கின் மற்ற இயக்குனர்கள் செய்யும் தவறை செய்யவில்லை நிச்சயம் படம் நல்லா இருக்கும் என்ற நினைப்பிலேயே படம் பார்த்துக்கொண்டு இருந்தேன் .இடைவேளைவரை குழந்தை தத்தக்கா பித்தக்கா என தத்தி தத்தி நடப்பதுபோல சண்டைகாட்சியும் ,காதல் காட்சியும் ,விரும்பும்பெண்ணை கவர்கிறேன் என்று சொல்லி சின்ன புள்ளைகளுக்கு சூப்பர்மேன் உடை வாங்கி கொடுப்போமே அதேபோல ஒரு உடை மாட்ட வைத்து  ஜீவாவையும் அவஸ்த்தை படுத்தி நம்மையும் அவஸ்த்தைக்கு உள்ளாக்குகிறார் மிஷ்கின் ,

ஒரு வழியாக இடைவேளை வருகிறது .சரி இனிமேல் சூப்பர் ஹீரோ வருவார் வருவார் என படம் பார்த்துக்கொண்டே இருந்தேன் .ஜீவா அந்த கருப்பு உடை மாட்டிக்கொண்டு கட்டிடத்தின் உச்சியில் நின்றதும் கடைசி காட்சியில் இரும்பு பாலத்தில் ஓடியதும் வேணா மிஷ்கினுக்கு சூப்பர்மேன் ஆக தெரிந்து இருக்கலாம் .படம் பார்த்த நமக்கு ஐயோ பாவம் ஜீவா நல்லா நடிக்கிற ஒரு நடிகனை இப்படி கேவலபடுத்தனுமா என்றுதான் தோணும் .

எடுக்கும் எல்லா படத்திலும் ஐட்டம் பாட்டை வித்தியாசமாக சாரயநெடியோடு காட்சிபடுத்துவதில் மிஷ்கின் வித்தியாசமாக இருக்கிறார் .புகழ்பெற்ற மேடை நாடக நடிகர் கிரீஸ் கர்னாட் இந்த படத்திற்கு எதற்கு .அந்த முதுகு வளைந்த ஊனமுற்ற நபர் கதைக்கு எந்தவிதத்தில் அவசியம் .கதாநாயகி எங்கே இருந்து பிடித்துகொண்டு வந்தார் .வித்தியாசமா படம் பிடிக்கிறேன்னு எல்லா படத்திலும் குளோசப்பில் கால்களை காட்டுகிறாரே அது எதற்கு .நாசர் மட்டுமே கொஞ்சம் இந்த படத்தில் நடித்து இருக்கிறார் .

பின்னணி இசை படத்தில் நன்றாக இருப்பதாக தெரிந்தாலும் சில இடங்களில் எரிச்சலையும் கிளப்புகிறது .படத்தில் வரும் ப்ளாஷ் பேக் காட்சி இருக்கே அப்பப்பா புல்லரிக்குது போங்க .

படத்தின் ஆரம்பத்தில் ப்ரூஸ்லீக்கு சமர்ப்பணம் என்று வருகிறதே அது எதற்கு .
மொத்தத்தில் ஜீவா எனும் நல்ல நடிகனை வேஸ்ட்டாக்கி தானும் பேச்சு அளவில்தான் புலி மத்தபடி எலிதான் என இந்த படத்தில் நிரூபித்து இருக்கிறார் மிஷ்கின் .

இது என் எண்ணம் மட்டுமே .படம் நான் பார்த்துட்டேன் .நீங்க போய் திரை அரங்கில் பார்ப்பதும் பார்க்காததும் உங்க இஷ்ட்டம்