Saturday 2 February 2013

கடல் பார்க்க ஐஞ்சு ரூவாக்கு மேல செலவு செய்யாதீங்க


கடல் எப்பொழுது எனக்கு முதல் பரிச்சயம் நினைவுபடுத்தி பார்க்கிறேன்.

மூன்றாவது படிக்கும்போது சென்ற சிறிய இன்ப சுற்றுலாதான் முதன் முதலில் கடல் பார்த்த அனுபவம்.

அந்த சுற்றுலாவுக்கு ஒரு சர்பத் சேர்த்து போய் வர மொத்தமே ஐந்து ரூபாய் மட்டுமே.மதிய உணவு புளிச்சோறு கட்டி எல்லாக்குழந்தகளும் கொண்டுபோனோம்.கூடுதலாக வீட்டில் ஐந்து ரூபாய் கொடுத்தார்கள்.

சுற்றுலா சென்ற இடம் பேராவூரனிக்கு அருகில் உள்ள மனோரா.

கடலும் கடல் ஒட்டி மனொரா கம்பீரமாக நின்றது அந்த வயதில் ஆச்சரியம்.பேருந்து தூர வரும்போதே உயரமாக தெரிந்த மனோரா பார்த்து எல்லா குழந்தைகளும் கை கொட்டி சந்தோசமாய் ஆர்ப்பரித்தது நினைவில் இன்னும் இருக்கு.

இருபத்து அய்ந்து பைசா கொடுத்து மொனோரா உள்ளே சென்று ஆட்டம் போட்டதும் உச்சிவரை சென்று கீலே பார்த்தபோது பயமாக இருந்தது.

அதன் பின்பு கடல் நோக்கி ஓடினோம்.கடல் அலை இல்லாத கடல்.இப்ப சென்று பார்த்தாலும் அமைதியாகவே இருக்கும் கடல்.சகதியும் பாசிகள் அடர்ந்தும் கடலோரம் இருந்தது.இருந்தும் கால் நனைத்து விளையாடியத்தும் ,சங்கு சிப்பிகள் தேடி எடுத்ததும் ஒருவரை ஒருவர் துரத்தி விளையாடியதும் இன்னும் நினைவில் இருக்கு.

மாலை நேரம் நெருங்கியவுடன் ஆசிரியர் வீடு திரும்ப அழைத்ததும் எல்லோரும் கடலையும் மனோராவையும் திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே வந்தது பசுமையாக இருக்கு.

இப்பவும் மனோரா சென்றே வருகிறேன்.காலாங்கள் கடந்தும் கம்பீரமாக நிற்க்கிறது மனோரா.
கடலும் அன்று பார்த்தது போலவே அலைகள் இல்லாமல் அமைதியாகவே இருக்கு.

Friday 1 February 2013

டேவிட் - நறுக் விமர்சனம்


போதையோடு ஆரம்பித்து போதையோடு நகர்கிறது படம்.

விக்ரம் ,ஜீவா இருவரும் இருக்கிறார்கள் ஆக்ஸன் படம் அல்லது வேகமாக இருக்கும் என படத்திற்க்கு சென்றீர்கள் என்றால் அது இரண்டும் இல்லை.

இது வேறு தளத்தில் இயங்கும் படம்.இருவர் நடிப்பும் மட்டும் அல்ல எல்லோருடைய நடிப்பும் நன்றாக இருக்கு.அதற்க்காக உங்களால் பொருமையாக படம் பார்க்கமுடியும் என்று என்னை சொல்ல சொன்னால் என்னால் முடியாது.இருக்கையில் நெளிவதை ஒருபோதும் தடுக்க முடியாது.

இது போன்ற படம் ஹிந்தியில் நன்றாக ஓடுவதற்க்கு சாத்தியம்.தமிழில் முயன்று இருக்கின்றார்கள்.ரசிகர்கள் மனநிலை எப்படி இருக்கும் என சொல்ல முடியவில்லை.

விக்ரம் அப்பாவாக வருபவர் இறந்து ஆவியாக வருபவராக நடித்து இருக்கின்றார்.அவர் காட்சி வருகின்றபோது கொஞ்சம் சிரிக்க முடிகிறது.

மற்றபடி ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது.

இசை நிறைய பேரின் பெயர் டைட்டிலில் வருகிறது.அவ்வளவுதான்.

படம் பார்க்கலாம் என்று கேட்டால் பார்க்கலாம் என சொல்வேன் வேறுவிதமான தளத்தில் படம் பார்க்க ஆசைப்பட்டால்.

பொழுதுபோக்கு சித்திரமாக நினைத்து போனீர்கள் என்றால் நிச்சயம் ஏமாந்து போவீர்கள்.......