Tuesday 13 August 2013

தலைவா.............. தடைபோட ஒன்றுமில்லை.......



தலைவா............

விமர்சனம் எழுதும் முன்பு ஒரு செய்தி.நான் விஜய் ரசிகன்.ஆனால் இந்த விமர்சனம் அதை தான்டி எழுதும் நிலை உள்ளது.

அமலாபால் அழகாய் இருக்கிறார்.ஆஸ்த்ரேலியா அழகா இருக்கு.நீரவ்ஷா ஒளிப்பதிவு மிக நன்றாக இருக்கு.சன்டை காட்சிகளும் நல்லா இருக்கு.விஜய் நடிப்பும் கூட ஓகேதான்.ஆனால் இது மட்டும் போதுமா ஒரு படத்துக்கு.

நாயகன்,தளபதி,பாட்ஷா,தேவர்மகன் என தமிழ் படங்களின் சில காட்சிகளை மாத்தி எடுத்தால் படம் பார்க்கும் ரசிகனுக்கு புரியாமல் போய் விடுமா என்ன.




நாயகன் படத்தின் கமல் வேடத்தை சத்தியராஜும்,கமலை சுட்டுக்கொல்லும் அந்த மனவளர்ச்சி குன்றியவர் வில்லனாகவும் படத்தில் இடம் பிடித்து உள்ளனர்.அனேக காட்சிகள் பாட்ஷா ,மற்றும் தளபதி படத்தின் மறு ஆக்கம்.

படம் ஆரம்பித்து இடைவேளைவரை ஆஸ்த்திரேலியாவில் ஆமை போல நகர்கிறது.அமலாபால் அழகை கான்பிப்பதற்க்காக இவ்வளவு செலவா.காதல் காட்சிகள் ஒட்டவே இல்லை மனதில்.சந்தானம்
வாயசைத்து செல்வதற்க்கு எதற்க்கு இந்த படத்தில்.





சத்தியரஜ் சிகப்பு துன்டை குறுக்கே போட்டு வசனம் பேசி செல்கிறார்.
கருப்பு ஆடாக பொன்வன்னன்.
பாடல் காட்சிகள் செட்டிங் எல்லாமே நாயகன் படத்தை நினைவு படுத்துகின்றன.





விஜய் நன்றாக நடித்து இருக்கிறார் என சொன்னாலும் அன்டர்ப்ளே செய்து நடிக்கிறேன் என சில இடங்களில் எரிச்சலையும் வரவழைத்துவிடுகிறார்.

மொத்தம் படத்தில் சில காட்சிகள் நன்றாக இருந்தாலும் மொத்த படத்தையும் பொருமையாகத்தான் பார்க்கவேன்டும்.
விஜய் ரசிகர்களுக்காக எந்த காட்சிகளும் படத்தில் இல்லை வாங்கனா வனக்கங்கனா பாட்டை தவிற.
நான் மறியான் போன்ற மிக ஸ்லோவான படத்தையும் ரசித்து பார்த்து இருக்கிறேன்.ஆனால் விஜய் ரசிகனாக இப்படி ஒரு ஸ்லோவான படத்தை ரசிக்க முடியவில்லை.
இந்த படத்தை தமிழகத்தில் எதற்க்காக திரையிடவிடாமல் செய்து இருக்காங்க என தெரியவில்லை