Saturday 2 November 2013

அமர்க்களமான, அட்டகாசமான “ஆரம்பம்”


அஜீத் ரசிகர்களுக்கு இது தல தீபாவளிதான் சந்தேகமே இல்லை .யார் சொல்வதையும் கேக்காமல் திரைஅரங்கில் சென்று விசில் அடிச்சு கொண்டாடலாம் அஜீத் ரசிகர்கள் .

நேற்று என்னால் படம் பார்க்கமுடியவில்லை அதனால பேஸ்புக்கில் வந்த விமர்சனங்களை படித்துக்கொண்டு இருந்தேன் .அப்ப்பப்பா இவர்களின் விமர்சன பார்வையை என்ன சொல்வது .ஆங்கில பட காப்பி .முக்கால்வாசி படத்துக்கு பின்பு சரி இல்லை .நயன்தார செத்து போகிறார் என கதை கதையா அடிச்சு விட்டத படித்தபோது எனக்கே திரை அரங்கம் செல்வோமா வேணாமா என ஒரு குழப்பம் வந்துவிட்டது .

இது உலகப்படம் இல்லை லாஜிக் மேஜிக் எல்லாம் பார்த்து எடுக்க .அஜித் ஆர்யா எனும் இரண்டு குதிரைகளுக்கு சரியான தீனி போடவேண்டும் .அதை இயக்குனர் சரியாகவே செய்து இருக்கார் .

கதை நாம எப்பவும் செய்திகளில் பார்க்கும் படிக்கும் ஊழல் ,பேரம் பேசுதல்தான் கதை .எல்லா காலங்களிலும் இதை ஒட்டி எடுக்கப்படும் படம் வந்துகிட்டே இருக்கு .அதுனால கதை பற்றி பேசவேண்டிய அவசியம் இல்லை .இங்க நிறைய பேர் கதை எழுதிக்கிட்டு இருக்காங்க அதுனால அது வேணாம் .


 

அஜீத் நடிப்பைப்பற்றி எப்பொழுதும் இப்படி விமர்சனம் வரும் நடந்துகிட்டே இருக்கார் என .இதிலும் அப்படித்தான் ஆனால் ரசிக்கும்படி நடக்கிறார் .சில இடங்களில் அவர் வசனம் பேசும்போது அஜித் ரசிகர்களுக்கு தன்னையறியாமல் விசில் அடிக்க வரும் .
ஆர்யாவுக்கு இடம் கொடுத்து நடித்து இருக்கிறார் .இது பெரிய விஷயம் .

ஆர்யா மிக சரியாக பொருந்தி போகிறார் அவரது கதாபாத்திரத்துக்கு .இரண்டு ஹீரோ ஒன்றாக பயணிக்கும்போது அது உருத்தக்கூடாது.அஜித் ஆர்யாவை நடிக்க விட்டு வேடிக்கை பார்ப்பதால் கிடைக்கும் கேப்களில் ஸ்கோர் செய்துவிடுகிறார் .






நயன்தாரா முகம் பார்க்க முடியவில்லை முதிர்ச்சி தெரிகிறது என நேற்று நிறையப்பேர் எழுதி இருந்தாங்க .அது என்னங்க ஆங்கில படங்களில் நடிக்கும் நடிகைகளை புகழும்போது அவர்கள் வயது மட்டும் தெரியவில்லை இவர்களுக்கு .நாற்ப்பது வயதுக்குமேல் இருக்கும் ஆங்கிலப்பட நடிகைகளுக்கு .நன்றாகவே அஜீத் ஆர்யா இருவரோடும் சேர்ந்து நடித்து இருக்கின்றார் .

படத்தின் ஒளிப்பதிவு ,இசை இரண்டும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது .ஏழு புள்ளி ஒன்று டிஜிட்டல் சிஸ்டம் உள்ள திரை அரங்கில் பார்த்தேன் .மிக துல்லியமாக இருந்தது சவுண்ட் .யுவன் நன்றாக பின்னணி இசை அமைத்து இருக்கின்றார் .

ஒளிப்பதிவில் மெனக்கெடல் தெறிகிறது .சண்டைக்காட்சிகள் அஜித் ரசிகர்களுக்கு விருந்து .

கிளைமாக்ஸ் காட்சி கொஞ்சம் நாடகதன்மைதான் இருந்தும் அங்கே அஜீத் இருப்பதால் ஒன்றும் தெரியவில்லை .

எனக்கு திரைக்கதை பற்றி எல்லாம் தெரியாது அதைப்பற்றி பேச .என்னை திரை அரங்கில் கடைசிவரை உக்காரவைக்கிறதா என மட்டுமே பார்ப்பேன் .அப்படி பார்க்கும்போது கடைசிகாட்சி வரை ரசிக்க முடியும் .

மொத்தம் திரை அரங்கம் சென்று பாருங்கள் .

ஆரம்பம் முதல் முடிவரை அமர்க்களமாய் இருக்கும் உங்களுக்கு