Friday 26 December 2014

மீகாமன் மீண்டும் பார்க்கலாம்

பாருக் முகம்மது
3 hrs ·
More options
மீகாமன்.

இரவு மிட்நைட் காட்சி கயல் படம் என நினைத்து திரைஅரங்கம் சென்றோம்.அங்கே கயல் ஆறுமணி காட்சி இப்போ மீகாமன் என சொன்னாங்க.படம் வெளியானது தெரியாமல் போயிருந்தோம்.ஆர்யா நடித்து இருக்கவும் சரி பார்ப்போம் என பார்த்தோம்.

படத்தின் கதை அரசாங்கத்திற்க்கு நீண்டவருடமாக தலைவியாக இருக்கும்
போதைமருந்து கடத்தல் தலைவனை பிடிப்பது.அவன் பெயர் மட்டுமே தெரியும் அவன் யார் என தெரியாது.

இந்த கும்பலை பிடிக்க இரண்டு அன்டர்கவர் போலிஸ் ஆபிஸர்கள் இரண்டு போதை கடத்தும் கும்பலில் நாண்கு வருடமாக தனிதனியாக வேலை செய்கின்றார்கள்.

அந்த அன்டர்கவர் போலீஸ் ஆபிஸர்கள் அந்த போதைபொருள் கடத்தல் தலைவனை பிடித்தார்களா என்பது கதை.கதையை படத்தில் பார்த்துக்கொள்ளுங்கள்.

நிறைய ஆங்கில படங்களில் பார்த்த கதைதான்.ஆனாலும் தமிழில் ஆங்கில படத்துக்கு நிகராக பார்க்கும்போது படம் நன்றாக இருக்கின்றது.
யாரேனும் படம் பார்த்துட்டு இது அந்த படத்தின் காப்பி இது இந்த படத்தின் காப்பி என சொல்லக்கூடும்.
இருக்கட்டுமே .தமிழில் ஒரு ஆங்கில படம் பார்த்த உணர்வு இருக்கே அது போதும்.

ஆர்யா நல்ல மெனக்கெடலுடம் நடித்து இருக்கின்றார்.அந்த போலிஸ் கதாபாத்திரத்திற்க்கு மிக பொருத்தமாக இருக்கின்றார்.நல்ல நடிப்பும்கூட.
ஆக்சனில் அனல் பறக்க வைக்கின்றார்.
ஆரம்பம் படத்தைவிட இந்த படம் ஆர்யாவுக்கு பெஸ்ட்.

ஹன்சிகா எல்லா கதாநாயகியையும் போலத்தான் என்றாலும் மெல்லிய நகைச்சுவை வரும் அளவுக்கு நடித்து இருக்கின்றார்.அழகாய் இருக்கின்றார் கொஞ்சம் போதையும் ஏற்றுகிரார் ஒரு பாடல் காட்சியில்.

வில்லன் தன் முகம் வெளியே தெரியாத அளவுக்கு இருக்கின்றார் என சொல்லப்படுகின்றது.கடைசி காட்சியில் ஆர்யாவுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை வில்லனுக்கும் கொடுத்து இருக்கவேண்டும்.ஆனால் மிக சாதரனமாக மாட்டிக்கொள்கிறார்.

ஏகப்பட்ட நடிகர்கள் ஒவ்வொரு காட்சியில் வந்தாலும் நிறைவாய் செய்து இருக்கின்றார்கள்.

ஒளிப்பதிவு மிரட்டல்.மிக நேர்த்தியான ஒளிப்பதிவு.
இசை .பின்னனி இசை ஈர்த்த அளவு ஏணோ பாடலில் ஈர்க்கவில்லை.

சண்டைக்காட்சி அதிரடி.ஆங்கில படத்தில் மட்டும்தான் அப்படி அமைக்க முடியுமா நாங்களும் அமைப்போம் என மிரட்டி இருக்காங்க.
மகிழ்திருமேனியின் தடைற தாக்க படம் ஏற்க்கனவே பார்த்து இருக்கின்றேன்.அதுவே அதகளம் எனும்போது இந்த படத்துக்கு சொல்லவே தேவை இல்லை.நன்றாக இயக்கி இருக்கின்றார்.
மொத்தத்தில் மீகாமன்
ஆக்சன் பக்கா.
நல்ல பொழுது போக்கு படம்.

மீகாமன் மீண்டும் பார்க்கலாம்

பாருக் முகம்மது
3 hrs ·
More options
மீகாமன்.

இரவு மிட்நைட் காட்சி கயல் படம் என நினைத்து திரைஅரங்கம் சென்றோம்.அங்கே கயல் ஆறுமணி காட்சி இப்போ மீகாமன் என சொன்னாங்க.படம் வெளியானது தெரியாமல் போயிருந்தோம்.ஆர்யா நடித்து இருக்கவும் சரி பார்ப்போம் என பார்த்தோம்.

படத்தின் கதை அரசாங்கத்திற்க்கு நீண்டவருடமாக தலைவியாக இருக்கும்
போதைமருந்து கடத்தல் தலைவனை பிடிப்பது.அவன் பெயர் மட்டுமே தெரியும் அவன் யார் என தெரியாது.

இந்த கும்பலை பிடிக்க இரண்டு அன்டர்கவர் போலிஸ் ஆபிஸர்கள் இரண்டு போதை கடத்தும் கும்பலில் நாண்கு வருடமாக தனிதனியாக வேலை செய்கின்றார்கள்.

அந்த அன்டர்கவர் போலீஸ் ஆபிஸர்கள் அந்த போதைபொருள் கடத்தல் தலைவனை பிடித்தார்களா என்பது கதை.கதையை படத்தில் பார்த்துக்கொள்ளுங்கள்.

நிறைய ஆங்கில படங்களில் பார்த்த கதைதான்.ஆனாலும் தமிழில் ஆங்கில படத்துக்கு நிகராக பார்க்கும்போது படம் நன்றாக இருக்கின்றது.
யாரேனும் படம் பார்த்துட்டு இது அந்த படத்தின் காப்பி இது இந்த படத்தின் காப்பி என சொல்லக்கூடும்.
இருக்கட்டுமே .தமிழில் ஒரு ஆங்கில படம் பார்த்த உணர்வு இருக்கே அது போதும்.

ஆர்யா நல்ல மெனக்கெடலுடம் நடித்து இருக்கின்றார்.அந்த போலிஸ் கதாபாத்திரத்திற்க்கு மிக பொருத்தமாக இருக்கின்றார்.நல்ல நடிப்பும்கூட.
ஆக்சனில் அனல் பறக்க வைக்கின்றார்.
ஆரம்பம் படத்தைவிட இந்த படம் ஆர்யாவுக்கு பெஸ்ட்.

ஹன்சிகா எல்லா கதாநாயகியையும் போலத்தான் என்றாலும் மெல்லிய நகைச்சுவை வரும் அளவுக்கு நடித்து இருக்கின்றார்.அழகாய் இருக்கின்றார் கொஞ்சம் போதையும் ஏற்றுகிரார் ஒரு பாடல் காட்சியில்.

வில்லன் தன் முகம் வெளியே தெரியாத அளவுக்கு இருக்கின்றார் என சொல்லப்படுகின்றது.கடைசி காட்சியில் ஆர்யாவுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை வில்லனுக்கும் கொடுத்து இருக்கவேண்டும்.ஆனால் மிக சாதரனமாக மாட்டிக்கொள்கிறார்.

ஏகப்பட்ட நடிகர்கள் ஒவ்வொரு காட்சியில் வந்தாலும் நிறைவாய் செய்து இருக்கின்றார்கள்.

ஒளிப்பதிவு மிரட்டல்.மிக நேர்த்தியான ஒளிப்பதிவு.
இசை .பின்னனி இசை ஈர்த்த அளவு ஏணோ பாடலில் ஈர்க்கவில்லை.

சண்டைக்காட்சி அதிரடி.ஆங்கில படத்தில் மட்டும்தான் அப்படி அமைக்க முடியுமா நாங்களும் அமைப்போம் என மிரட்டி இருக்காங்க.
மகிழ்திருமேனியின் தடைற தாக்க படம் ஏற்க்கனவே பார்த்து இருக்கின்றேன்.அதுவே அதகளம் எனும்போது இந்த படத்துக்கு சொல்லவே தேவை இல்லை.நன்றாக இயக்கி இருக்கின்றார்.
மொத்தத்தில் மீகாமன்
ஆக்சன் பக்கா.
நல்ல பொழுது போக்கு படம்.

Sunday 14 December 2014

லிங்கா விமர்சகர்களுக்கு என் கேள்விகள்.....



லிங்கா.
இது விமர்சனம் இல்லை.கடந்த மூன்றுநாளாக ஆள் ஆளுக்கு எழுதிட்டாங்க.நல்லா இருக்குன்னும் எழுதிட்டாங்க நல்லா இல்லைன்னும் எழுதிட்டாங்க.படத்தின் கதையும் எல்லோருக்கும் தெரியும் இப்போ. அதனால அதுவும் வேண்டாம்.இங்கு படிச்ச விமர்சனங்களால் இப்போ படம் பார்த்துவிட்டு வந்து சில கேள்விகள் தோன்றுகிறது.அது மட்டுமே.

படம் பார்க்கும் முன்பு ரஜினியிடம் என்ன எதிர் பார்த்து போனீங்க.ஒரு விஜய் நடிப்போ அல்லது அஜீத் நடிப்போ எதிர்பார்த்து போனீங்களா?.
இல்லை ரஜினியின் இன்னொரு பாட்ஷா படமோ,சிவாஜியோ அல்லது எந்திரன் படமோ எதிர் பார்த்து போனீங்களா?.
சிவாஜி படத்தின் வில்லன் சுமன் போன்றோ ,எந்திரன் படத்தின் வில்லன் ரஜினி போன்ற பவரான வில்லனை எதிர்ப்பதுபோல கதை எதிர் பார்த்து போனீங்களா?.
அனுஷ்கா,சோனாக்சியிடம் என்ன மாதிரியான நடிப்பை எதிர்பார்த்து போனீங்க.சிவாஜியில் ஷ்ரேயா,எந்திரன் ஐஸ்வர்யா நடிப்பு போன்று இருக்கனும் என எதிர்பார்த்தீங்களா?.
ஏஆர் ரஹ்மானிடம் இன்னொரு சிவாஜி,எந்திரன் படத்தின் இசையை போன்று எதிர்பார்த்து போனீங்களா?.
இதுபோல வேண்டும் என்றால் அந்த படங்கள்தான் இருக்கே அதையே பார்த்து விடலாமே?!.
லிங்கா படம் நல்லா இருக்குதான் ஆனா ஏதோ ஒன்னு குறையுது என்றால் நான் மேல சொல்லி இருப்பவற்றில் ஏதோ ஒன்று குறையுதுதானே அர்த்தம்?!.
ஈரான்,கொரியன் என உலகப்படம் பார்த்துவந்த நமக்கு லிங்கா படம் புரியவில்லையா.
நோலனின் புரியாத படம் புரிந்தகொண்ட அளவுக்கு இந்த ரஜினியின் லிங்கா படம் புரியவில்லையா?.

அல்லது கதை சொல்லும் போக்கு புடிக்கவில்லையா.
படம் பார்த்துக்கொண்டு இருந்தபோது எழுந்து ஓடிவிட தோன்றியதா.
எது உங்களுக்கு புடிக்கவில்லை?.

நேரடியாக கதை புதியுற மாதிரி எடுத்தது புடிக்கலையா.
இரண்டாம் பகுதியில் மெதுவாக கதை சொல்லும் போக்கு நடைபெருகின்றது என சொல்றீங்களா?.இது ஆக்சன் படமாக இருந்தால் வேகமாக நகரும் திரைக்கதை எழுதி படம் எடுத்து இருப்பாங்க.ஆனா ஒரு அணை ஊருக்காக கட்டப்படும்போது அதன் போக்கில்தானே சொல்லமுடியும்.
இத்தனை வயதிலும் இவ்வளவு சுறு சுறுப்பாக ரசிகனின் மனநிலைக்கு ஏற்றவாறு நடித்து இருப்பதே பெரிய விசயமில்லையா?.
அடுத்த ஐந்து வருடங்களில் விஜயோ அஜித்தோ தங்களை இதுபோல நிலைநிறுத்திகொள்ள முடியுமா எனும் சந்தேகம் இருக்கும்போது முப்பத்தி ஐந்து வருடமாக கதாநாயகனாக தன்னை நிலை நிறுத்தி தான்தான் சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபித்து இருக்கின்றாரே அது பத்தாதா?!.

நீங்க பாட்ஷாவையோ சிவாஜி எந்திரன் படத்தையோ எதிர்பார்த்து போனது உங்க தவறு.
ரசிக்க தெரியாதவன் சொல்வது இந்த படம் நல்லா இல்லை என.
திரைக்கதை மேஜிக் ரஜினி படத்தில் எப்போதும் இல்லாதது.அதை நீங்க ஏன் எதிர்பார்க்கனும்?.
படம் பார்க்க வருபவனுக்கு மூன்றுமணி நேரம் போவது தெரியாமல் படமாக்கப்பட்டு இருக்கா என்பது முக்கியம். அதை படம் நன்றாக செய்கிறது.
ரஜினி ரசிகன் என்பதையும் தாண்டி பொதுவான திரைபார்வையாளனாக இதுக்குமேல் படம் எப்படி எடுக்கவேண்டும் என எனக்கு சொல்ல தெரியவில்லை.
படம் எனக்கு பிடிச்சு இருக்கு.பார்க்கதவங்க திரையில் பாருங்க.

Saturday 29 November 2014

காவிய தலைவன் என் பார்வையில்

இசைக்காவியம்
ஒளிஓவியம்
கலையழகு

இசையமைப்பாளர் ரஹ்மான்,ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா மற்றும் கலை இயக்குனர் மூவருக்கும் வாழ்த்துக்கள்.அவ்வளவு உழைப்பு இவர்களுடையது.

படத்தின் டைட்டில் இசையிலேயே நாடக உலகுக்குள் அழைத்து சென்றுவிடுகின்றார் ரஹ்மான்.நீரவ்ஷா தன் ஒளிப்பதிவில் கலை இயக்குனரோடு சேர்ந்து கதை நடக்கும் காலகட்டத்துக்குள் நம்மை கொண்டு வந்துவிடுகின்றனர்.

சித்தார்த்தும் பிரித்விராஜும் போட்டி போட்டுக்கொண்டு நடித்து இருக்கின்றனர்.நாசர் சித்தார்த்துக்கு ராஜபார்ட் வாய்ப்பு கொடுக்கும்போது பிரித்விராஜுகு ஏற்ப்படும் வன்மத்தில் ஆரம்பிக்கிறது இருவருக்குமான நடிப்பு.
இருவருக்குமே இந்த படம் ஒரு மைல்கல்.
நாடக கம்பெணியின் குருவாக நாசர்.இவரை விட அந்த கதாபாத்திரத்தில் வேறு ஒருவரை பொருத்தி பார்க்கமுடியவில்லை.

வேதிகா ஏற்க்கனவே பரதேசியில் நன்றாக நடித்து இருந்தாலும் இந்த படத்தில் நடிப்பில் இன்னும் மெருகேறி இருக்கின்றார்.

தம்பிராமையா,சிங்கம்புலி என படத்தின் கதாபாத்திரங்களுக்கு தேர்வு செய்யப்ட்டவர்கள் அத்தனை பேரும் சரியான தேர்வு.
வசந்தபாலனின் இன்னும் ஒரு மிகச்சிறந்த இயக்கம் இந்த படம்.
கதை நான் சொல்ல போவது இல்லை.திரையில் பார்த்துக்கொள்ளுங்கள்.
படத்தில் இடம்பெரும் அநேக இடங்கள் காரைக்குடியை சுற்றி உள்ள இடங்களாக இருக்கு.அந்த இடங்கள் எல்லாம் நான் நேரில் பார்த்து இருக்கின்றேன்.அதே இடத்தை திரையில் பார்க்கின்றபோது பிரமாண்டமாக இருக்கு.
வசனம் எழுதி இருப்பது ஜெயமோகன்.காட்சியின் தன்மைக்கேற்ப்ப உருத்துதல் இல்லாமல் எழுதி இருக்கின்றார்.
முடிந்த அளவுக்கு திரையில் பாருங்க.அப்பொழுதுதான் படத்தின் இசையை,ஒளிப்பதிவை,கலை இயக்கத்தை எல்லோரின் நடிப்பையும் ரசிக்க முடியும்

Wednesday 22 October 2014

கத்தி- செம ஷார்ப்........ விமர்சனம்



கத்தி என் பார்வையில்
முதலில் முருகதாசுக்கு வாழ்த்துக்கள்.
விஜய் கதாநாயகனாக இருந்தும் ஓப்பனிங் மிக சாதரனமாக விஜயை அறிமுக படுத்தியதற்க்கும் ஓப்பனிங் பாட்டு வைக்காததற்க்கும்.
படத்தில் மூன்று சன்டைகாட்சிகள் இருந்தபோதும் இதை முழுக்க ஆக்சன் படம் என சொல்ல முடியாது.
படத்தின் பாடல்கள் நன்றாக இருந்த அளவுக்கு பின்னனி இசை கொஞ்சம் பத்தாதுதான்.இருந்தும் ஓகே.
ஒளிப்பதிவு நன்றாக இருக்கு.கதைக்களத்தின் மூடுக்கேற்ப்ப ஒளிப்பதிவு செய்து இருக்கின்றார் ஒளிப்பதிவாளர்.
நடனம் மிக நன்றாக இருக்கு.சொல்லவே வேனம் நடனத்தில் தன்னை அடிச்சுக்கு ஆளே இல்லை என்பதை மறுபடியும் நிரூபித்து இருக்கின்றார்.
சமந்தா ஒரு கதாநாயகிக்கு என்ன வேலை இருக்குமோ அதை மட்டும் செய்கின்றார் கொஞ்சம் அழகாக இருக்கின்றார்.
அனல் அரசுவின் சன்டை அனல் பறக்கின்றது.அதுவும் எதிர்பாரமல் திடிரென நடக்கும் அந்த முதல் சண்டை அபாரம்.


சரி இனி கதைக்கு வருவோம்.
ஜெயிலில் இருந்து ஒரு கைதி தப்பிக்கின்றார் அறிமுக காட்சியில்.அவனை பிடிக்க அங்கே கைதியாக இருக்கும் பிராடு விஜய் உதவியை நாடுகின்றனர் போலீஸ்.
அவரும் சரியாக கைதி இருக்கும் இடத்தை போலிஸோடு சுற்றிவலைத்து பின்பு போலிஸ் பார்க்கும்போது கைது செய்ய உதவிய விஜய் போலிசிடம் இருந்து தப்பிவிடுகின்றார்.

தப்பிய விஜய்(கதிரேசன்) தன் நண்பனின் உதவியை நாடுகின்றார் போலி பாஸ்போர்ட்டில் தாய்லாந்துக்கு தப்பி செல்ல.அவரும் பாஸ்போர்ட்க்கு ஏற்ப்பாடு செய்து ஏர்போர்ட்டில் தாய்லாந்து செல்ல காத்து இருக்கும்போது அங்கே சமந்தாவை பார்க்கின்றார்.அவரையே பார்க்கும்போது சமந்தா தன் நம்பரை கொடுத்து போன் செய்ய சொல்லி சென்று விடுகின்றார்.சமந்தாவுக்காக தாய்லாந்து செல்லாமல் டிக்கெட்டை கிழித்து எறிந்து விடுகின்றார்.
விஜயும் அவரின் நண்பனும்(சதீஷ்) இரவில் சமந்தா கொடுத்த நம்பருக்கு போன் செய்கின்றனர்.அது வேரொறு நம்பருக்கு போகின்றது.ஏமாந்துவிட்டோம் என விஜய் சொல்லிக்கொண்டு இருக்கும்போது வேகமாக வரும் ஒரு லாரி மோதி நிக்கின்றது.அந்த லாரியை தொடர்ந்து வரும் காரில் இருந்து நாலைந்துபேர் இறங்கி காருக்குள் இருப்பவரை சுட்டுவிட்டு செல்கின்றனர்.


காருக்குள் இருப்பவர் யாரெனெ விஜய் ஓடிவந்து பார்க்கும்போது அங்கே குண்டடிபட்டு இன்னொரு விஜய்(ஜீவா) கிடக்கின்றார்.அவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு திரும்பும்போது விஜய்க்கு(கதிரேசன்) ஒரு யோசனை வருகின்றது.அதுபடி ஜீவாவின் பொருட்க்களை எடுத்துக்கொண்டு தன் பர்சை அங்கே விட்டுவிடுகின்றார்.போலிஸ் மறுபடியும் ஜீவாவை கதிரேசன் என நினைத்து ஜெயிலுக்கு கொண்டு போய்விடுகின்றனர்.
மறுநாள் கதிரேசனும் அவரின் நண்பனும் மறுபடியும் தாய்லாந்து போவதர்க்காக பேசிக்கொண்டு செல்கையில் அந்த வழியாக வரும் கலேக்டர் அவர்கள் இருவரையும் தன் காரில் ஏறசொல்லி உன் பெயருக்கு 25லட்சரூபாய் செக் வந்துவிட்டது என சொல்லி ஒரு முதியோர் இல்லத்தில் கொண்டுபோய்விடுகின்றார்.செக்கை ஆசையாக வைத்து இருக்கும் விஜயிடம் இருந்து பிடுங்கி ஒரு முதியவர் கிழித்துவிடுகின்றார்.கிடைத்த பணம் போச்சே என இருக்கும்போது பேட்டி எடுக்க வந்த இரண்டு வெளிநாட்டு பெண்களால் கதிரேசன்(விஜய்) தாக்கப்படுகின்றார்.அவர்களிடம் இருந்து தப்பித்து விடுகின்றார்.

மறுபடியும் கதிரேசன் வில்லன் ஆட்க்களால் கடத்தி வில்லன் இருப்பிடம் கொண்டு செல்லப்படுகின்றார்.அங்கே வில்லன் பேரம் பேசுகின்றார்.25கோடி தருகின்றேன் கோர்ட்டில் நடக்கும் கேசை வாபஸ் வாங்கு மற்றும் நாலு பேரிடம் கையெழுத்து வாங்கிட்டு வா என அட்வான்சாக 5கோடி ரூபாய் கொடுக்கின்றான் வில்லன் கதிரேசனை ஜீவா என நினைத்து.கதிரேசனும் சரியென பணத்தை வாங்கி கொண்டு வருகின்றார்.
நண்பனிடம் செய்யப்போகும் வேலைக்கு 25கோடி பணம் அட்வான்ஸாக 5கோடி வாங்கிவிட்டேன் என சொல்லும்போது முதியோர் இல்லத்தில் இருந்து போன் வருகின்றது.
உனக்கு ரோட்டரி சங்கத்தில் விருதும் 4லட்சம் பணமும் கொடுக்கின்றார்கள் என சொல்ல அந்த பணத்தையும் வாங்கிவிடுவோம் என நண்பன் மற்றும் முதியோர் இல்லத்தில் உள்ளவர்களோடு விழாவிற்க்கு செல்கின்றார்.அங்கே விஜய் யார் என திரைப்படம் திரையிடப்படுகின்றது.அதோடு அந்த நாலு லட்சரூபாய் யார் யாரல் கொடுக்கப்பட்டது என சொல்லுகின்றார்கள்.
இதற்க்குமேல் திரையில் கதையை பார்த்துக்கொள்ளுங்கள்.
விஜய்க்கு எந்த பஞ்ச் வசனமும் கொடுக்கபடவில்லை இடைவேளையின்போது வரும் ஐயாம் வெயிட்டிங் எனும் வசனம் தவிர.
மிக இயல்பாய் நடித்து இருக்கின்றார்.
கடைசிக்கட்ட போரட்டம் மிகையாக இருந்தாலும் கூட எதுவும் சாத்தியமே என படுகின்றது.


கிராமத்து விவசாயின் நீராதாரம் பற்றியும்,அதை உறிஞ்சும் கார்ப்பரேட் கம்பெணிகள் பற்றிய கதை இது.
மீடியாக்களின் ஸ்லாட் பற்றி அப்பட்டமாக பேசப்படுகின்றது.
கிங்பிஷர் பீர் கம்பெணிக்காரனின் கடன் பற்றியும் பேசப்படுகின்றது.
சென்சார் இதை எல்லாம் கட் செய்யாமல் விட்டதுக்கு அவர்களுக்கும் நன்றி சொல்லனும்.
இது விஜய் படம் என்பதை விட மிக அவசியமான படமும் கூட.
விஜய் ரசிகர்களை திருப்திபடுத்தும்.
யார் எப்படி வேண்டும் என்றாலும் விமர்சனம் எழுதலாம்.
ஆனால் நீங்க போயி திரை அரங்கில் பார்த்து விமர்சனம் எழுதுங்க.
விஜய்க்கு இன்னொரு மைல் கல் கத்தி.
ஆனால் இன்னொரு துப்பாக்கி அல்ல இந்த படம்.