Friday 26 December 2014

மீகாமன் மீண்டும் பார்க்கலாம்

பாருக் முகம்மது
3 hrs ·
More options
மீகாமன்.

இரவு மிட்நைட் காட்சி கயல் படம் என நினைத்து திரைஅரங்கம் சென்றோம்.அங்கே கயல் ஆறுமணி காட்சி இப்போ மீகாமன் என சொன்னாங்க.படம் வெளியானது தெரியாமல் போயிருந்தோம்.ஆர்யா நடித்து இருக்கவும் சரி பார்ப்போம் என பார்த்தோம்.

படத்தின் கதை அரசாங்கத்திற்க்கு நீண்டவருடமாக தலைவியாக இருக்கும்
போதைமருந்து கடத்தல் தலைவனை பிடிப்பது.அவன் பெயர் மட்டுமே தெரியும் அவன் யார் என தெரியாது.

இந்த கும்பலை பிடிக்க இரண்டு அன்டர்கவர் போலிஸ் ஆபிஸர்கள் இரண்டு போதை கடத்தும் கும்பலில் நாண்கு வருடமாக தனிதனியாக வேலை செய்கின்றார்கள்.

அந்த அன்டர்கவர் போலீஸ் ஆபிஸர்கள் அந்த போதைபொருள் கடத்தல் தலைவனை பிடித்தார்களா என்பது கதை.கதையை படத்தில் பார்த்துக்கொள்ளுங்கள்.

நிறைய ஆங்கில படங்களில் பார்த்த கதைதான்.ஆனாலும் தமிழில் ஆங்கில படத்துக்கு நிகராக பார்க்கும்போது படம் நன்றாக இருக்கின்றது.
யாரேனும் படம் பார்த்துட்டு இது அந்த படத்தின் காப்பி இது இந்த படத்தின் காப்பி என சொல்லக்கூடும்.
இருக்கட்டுமே .தமிழில் ஒரு ஆங்கில படம் பார்த்த உணர்வு இருக்கே அது போதும்.

ஆர்யா நல்ல மெனக்கெடலுடம் நடித்து இருக்கின்றார்.அந்த போலிஸ் கதாபாத்திரத்திற்க்கு மிக பொருத்தமாக இருக்கின்றார்.நல்ல நடிப்பும்கூட.
ஆக்சனில் அனல் பறக்க வைக்கின்றார்.
ஆரம்பம் படத்தைவிட இந்த படம் ஆர்யாவுக்கு பெஸ்ட்.

ஹன்சிகா எல்லா கதாநாயகியையும் போலத்தான் என்றாலும் மெல்லிய நகைச்சுவை வரும் அளவுக்கு நடித்து இருக்கின்றார்.அழகாய் இருக்கின்றார் கொஞ்சம் போதையும் ஏற்றுகிரார் ஒரு பாடல் காட்சியில்.

வில்லன் தன் முகம் வெளியே தெரியாத அளவுக்கு இருக்கின்றார் என சொல்லப்படுகின்றது.கடைசி காட்சியில் ஆர்யாவுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை வில்லனுக்கும் கொடுத்து இருக்கவேண்டும்.ஆனால் மிக சாதரனமாக மாட்டிக்கொள்கிறார்.

ஏகப்பட்ட நடிகர்கள் ஒவ்வொரு காட்சியில் வந்தாலும் நிறைவாய் செய்து இருக்கின்றார்கள்.

ஒளிப்பதிவு மிரட்டல்.மிக நேர்த்தியான ஒளிப்பதிவு.
இசை .பின்னனி இசை ஈர்த்த அளவு ஏணோ பாடலில் ஈர்க்கவில்லை.

சண்டைக்காட்சி அதிரடி.ஆங்கில படத்தில் மட்டும்தான் அப்படி அமைக்க முடியுமா நாங்களும் அமைப்போம் என மிரட்டி இருக்காங்க.
மகிழ்திருமேனியின் தடைற தாக்க படம் ஏற்க்கனவே பார்த்து இருக்கின்றேன்.அதுவே அதகளம் எனும்போது இந்த படத்துக்கு சொல்லவே தேவை இல்லை.நன்றாக இயக்கி இருக்கின்றார்.
மொத்தத்தில் மீகாமன்
ஆக்சன் பக்கா.
நல்ல பொழுது போக்கு படம்.

மீகாமன் மீண்டும் பார்க்கலாம்

பாருக் முகம்மது
3 hrs ·
More options
மீகாமன்.

இரவு மிட்நைட் காட்சி கயல் படம் என நினைத்து திரைஅரங்கம் சென்றோம்.அங்கே கயல் ஆறுமணி காட்சி இப்போ மீகாமன் என சொன்னாங்க.படம் வெளியானது தெரியாமல் போயிருந்தோம்.ஆர்யா நடித்து இருக்கவும் சரி பார்ப்போம் என பார்த்தோம்.

படத்தின் கதை அரசாங்கத்திற்க்கு நீண்டவருடமாக தலைவியாக இருக்கும்
போதைமருந்து கடத்தல் தலைவனை பிடிப்பது.அவன் பெயர் மட்டுமே தெரியும் அவன் யார் என தெரியாது.

இந்த கும்பலை பிடிக்க இரண்டு அன்டர்கவர் போலிஸ் ஆபிஸர்கள் இரண்டு போதை கடத்தும் கும்பலில் நாண்கு வருடமாக தனிதனியாக வேலை செய்கின்றார்கள்.

அந்த அன்டர்கவர் போலீஸ் ஆபிஸர்கள் அந்த போதைபொருள் கடத்தல் தலைவனை பிடித்தார்களா என்பது கதை.கதையை படத்தில் பார்த்துக்கொள்ளுங்கள்.

நிறைய ஆங்கில படங்களில் பார்த்த கதைதான்.ஆனாலும் தமிழில் ஆங்கில படத்துக்கு நிகராக பார்க்கும்போது படம் நன்றாக இருக்கின்றது.
யாரேனும் படம் பார்த்துட்டு இது அந்த படத்தின் காப்பி இது இந்த படத்தின் காப்பி என சொல்லக்கூடும்.
இருக்கட்டுமே .தமிழில் ஒரு ஆங்கில படம் பார்த்த உணர்வு இருக்கே அது போதும்.

ஆர்யா நல்ல மெனக்கெடலுடம் நடித்து இருக்கின்றார்.அந்த போலிஸ் கதாபாத்திரத்திற்க்கு மிக பொருத்தமாக இருக்கின்றார்.நல்ல நடிப்பும்கூட.
ஆக்சனில் அனல் பறக்க வைக்கின்றார்.
ஆரம்பம் படத்தைவிட இந்த படம் ஆர்யாவுக்கு பெஸ்ட்.

ஹன்சிகா எல்லா கதாநாயகியையும் போலத்தான் என்றாலும் மெல்லிய நகைச்சுவை வரும் அளவுக்கு நடித்து இருக்கின்றார்.அழகாய் இருக்கின்றார் கொஞ்சம் போதையும் ஏற்றுகிரார் ஒரு பாடல் காட்சியில்.

வில்லன் தன் முகம் வெளியே தெரியாத அளவுக்கு இருக்கின்றார் என சொல்லப்படுகின்றது.கடைசி காட்சியில் ஆர்யாவுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை வில்லனுக்கும் கொடுத்து இருக்கவேண்டும்.ஆனால் மிக சாதரனமாக மாட்டிக்கொள்கிறார்.

ஏகப்பட்ட நடிகர்கள் ஒவ்வொரு காட்சியில் வந்தாலும் நிறைவாய் செய்து இருக்கின்றார்கள்.

ஒளிப்பதிவு மிரட்டல்.மிக நேர்த்தியான ஒளிப்பதிவு.
இசை .பின்னனி இசை ஈர்த்த அளவு ஏணோ பாடலில் ஈர்க்கவில்லை.

சண்டைக்காட்சி அதிரடி.ஆங்கில படத்தில் மட்டும்தான் அப்படி அமைக்க முடியுமா நாங்களும் அமைப்போம் என மிரட்டி இருக்காங்க.
மகிழ்திருமேனியின் தடைற தாக்க படம் ஏற்க்கனவே பார்த்து இருக்கின்றேன்.அதுவே அதகளம் எனும்போது இந்த படத்துக்கு சொல்லவே தேவை இல்லை.நன்றாக இயக்கி இருக்கின்றார்.
மொத்தத்தில் மீகாமன்
ஆக்சன் பக்கா.
நல்ல பொழுது போக்கு படம்.

Sunday 14 December 2014

லிங்கா விமர்சகர்களுக்கு என் கேள்விகள்.....



லிங்கா.
இது விமர்சனம் இல்லை.கடந்த மூன்றுநாளாக ஆள் ஆளுக்கு எழுதிட்டாங்க.நல்லா இருக்குன்னும் எழுதிட்டாங்க நல்லா இல்லைன்னும் எழுதிட்டாங்க.படத்தின் கதையும் எல்லோருக்கும் தெரியும் இப்போ. அதனால அதுவும் வேண்டாம்.இங்கு படிச்ச விமர்சனங்களால் இப்போ படம் பார்த்துவிட்டு வந்து சில கேள்விகள் தோன்றுகிறது.அது மட்டுமே.

படம் பார்க்கும் முன்பு ரஜினியிடம் என்ன எதிர் பார்த்து போனீங்க.ஒரு விஜய் நடிப்போ அல்லது அஜீத் நடிப்போ எதிர்பார்த்து போனீங்களா?.
இல்லை ரஜினியின் இன்னொரு பாட்ஷா படமோ,சிவாஜியோ அல்லது எந்திரன் படமோ எதிர் பார்த்து போனீங்களா?.
சிவாஜி படத்தின் வில்லன் சுமன் போன்றோ ,எந்திரன் படத்தின் வில்லன் ரஜினி போன்ற பவரான வில்லனை எதிர்ப்பதுபோல கதை எதிர் பார்த்து போனீங்களா?.
அனுஷ்கா,சோனாக்சியிடம் என்ன மாதிரியான நடிப்பை எதிர்பார்த்து போனீங்க.சிவாஜியில் ஷ்ரேயா,எந்திரன் ஐஸ்வர்யா நடிப்பு போன்று இருக்கனும் என எதிர்பார்த்தீங்களா?.
ஏஆர் ரஹ்மானிடம் இன்னொரு சிவாஜி,எந்திரன் படத்தின் இசையை போன்று எதிர்பார்த்து போனீங்களா?.
இதுபோல வேண்டும் என்றால் அந்த படங்கள்தான் இருக்கே அதையே பார்த்து விடலாமே?!.
லிங்கா படம் நல்லா இருக்குதான் ஆனா ஏதோ ஒன்னு குறையுது என்றால் நான் மேல சொல்லி இருப்பவற்றில் ஏதோ ஒன்று குறையுதுதானே அர்த்தம்?!.
ஈரான்,கொரியன் என உலகப்படம் பார்த்துவந்த நமக்கு லிங்கா படம் புரியவில்லையா.
நோலனின் புரியாத படம் புரிந்தகொண்ட அளவுக்கு இந்த ரஜினியின் லிங்கா படம் புரியவில்லையா?.

அல்லது கதை சொல்லும் போக்கு புடிக்கவில்லையா.
படம் பார்த்துக்கொண்டு இருந்தபோது எழுந்து ஓடிவிட தோன்றியதா.
எது உங்களுக்கு புடிக்கவில்லை?.

நேரடியாக கதை புதியுற மாதிரி எடுத்தது புடிக்கலையா.
இரண்டாம் பகுதியில் மெதுவாக கதை சொல்லும் போக்கு நடைபெருகின்றது என சொல்றீங்களா?.இது ஆக்சன் படமாக இருந்தால் வேகமாக நகரும் திரைக்கதை எழுதி படம் எடுத்து இருப்பாங்க.ஆனா ஒரு அணை ஊருக்காக கட்டப்படும்போது அதன் போக்கில்தானே சொல்லமுடியும்.
இத்தனை வயதிலும் இவ்வளவு சுறு சுறுப்பாக ரசிகனின் மனநிலைக்கு ஏற்றவாறு நடித்து இருப்பதே பெரிய விசயமில்லையா?.
அடுத்த ஐந்து வருடங்களில் விஜயோ அஜித்தோ தங்களை இதுபோல நிலைநிறுத்திகொள்ள முடியுமா எனும் சந்தேகம் இருக்கும்போது முப்பத்தி ஐந்து வருடமாக கதாநாயகனாக தன்னை நிலை நிறுத்தி தான்தான் சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபித்து இருக்கின்றாரே அது பத்தாதா?!.

நீங்க பாட்ஷாவையோ சிவாஜி எந்திரன் படத்தையோ எதிர்பார்த்து போனது உங்க தவறு.
ரசிக்க தெரியாதவன் சொல்வது இந்த படம் நல்லா இல்லை என.
திரைக்கதை மேஜிக் ரஜினி படத்தில் எப்போதும் இல்லாதது.அதை நீங்க ஏன் எதிர்பார்க்கனும்?.
படம் பார்க்க வருபவனுக்கு மூன்றுமணி நேரம் போவது தெரியாமல் படமாக்கப்பட்டு இருக்கா என்பது முக்கியம். அதை படம் நன்றாக செய்கிறது.
ரஜினி ரசிகன் என்பதையும் தாண்டி பொதுவான திரைபார்வையாளனாக இதுக்குமேல் படம் எப்படி எடுக்கவேண்டும் என எனக்கு சொல்ல தெரியவில்லை.
படம் எனக்கு பிடிச்சு இருக்கு.பார்க்கதவங்க திரையில் பாருங்க.